பந்துவீச்சாளர்களுக்கு ‘சிம்ம சொப்பனம்’ ரஜத் படிதார் – இர்பான் பதான் பாராட்டு
ஐபிஎல் போட்டிகளில் தனது அதிரடி பேட்டிங்கால் கவனம் ஈர்த்து வரும் Rajat Patidar குறித்து இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் Irfan Pathan பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.
வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
அந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 240/4 என்ற மிகப்பெரிய ஸ்கோரை பதிவு செய்தது. இதில் ரஜத் படிதார் வெறும் 17 பந்துகளில் அரைசதம் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.
இந்த ஆட்டத்தைப் பற்றி பேசிய இர்பான் பதான், ரஜத் படிதாரின் அணுகுமுறையை சிறப்பாக பாராட்டினார். அவர் கூறுகையில், கிரீஸில் களம் இறங்கும் தருணத்திலேயே படிதார் ஆட்டத்தின் வேகத்தை மாற்றிவிடுகிறார் என்றும், முதல் பந்திலிருந்தே தாக்குதல்மிகு ஆட்டத்தை தொடங்கும் திறன் அவரிடம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், அவர் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பந்தும் பவுண்டரிக்குச் செல்லும் போலத் தோன்றுகிறது என்றும், பந்துவீச்சாளர்களுக்கு உண்மையான சவாலாக மாறியுள்ளார் என்றும் பதான் தெரிவித்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் வரிசையில் படிதார் மிகப்பெரிய பலமாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
