“இந்திய குடியுரிமை வழங்குவதாக கூறினர்” – ரஷித் கான் அதிர்ச்சி தகவல்
ரஷித் கான், உலக கிரிக்கெட்டில் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடும் அவர், உலகளாவிய T20 லீக் தொடர்களிலும் தனது திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தனது சுயசரிதை நூலில் அவர் பகிர்ந்துள்ள ஒரு தகவல் தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், Board of Control for Cricket in India-யுடன் தொடர்புடைய ஒரு உயரதிகாரி தன்னை சந்தித்து, இந்தியாவில் தங்கிவிட்டு இந்தியாக்காக கிரிக்கெட் விளையாடுமாறு கேட்டதாக ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
அந்த அதிகாரி, “உங்கள் நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது. நீங்கள் இந்தியாவில் தங்கி, குடியுரிமை பெற்று இங்கிருந்தே விளையாடலாம்” எனக் கூறியதாக அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
இதற்கு பதிலளித்த ரஷித் கான், அந்த அழைப்பை மரியாதையுடன் மறுத்ததாக தெரிவித்துள்ளார். “நான் என் தாய்நாட்டுக்காகவே விளையாடுவேன்” என்று அவர் உறுதியாக கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
